45 ' தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத் தலைவர் அமர்த்திய
நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான பணியாளர் யார்?46 தலைவர் வந்து பார்க்கும்
போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறு பெற்றவர்.47
அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உறுதியாக உங்களுக்குச்
சொல்கிறேன்.48 அப்பணியாள் பொல்லாதவனாய் இருந்தால், தன் தலைவர் வரக் காலந்
தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு,49 தன் உடன் பணியாளரை அடிக்கவும்
குடிகாரருடன் உண்ணவும் குடிக்கவும் தொடங்குவான்.50 அப்பணியாள் எதிர்பாராத
நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வருவார்.51 அவர் அவனைக் கண்டந்துண்டமாய்
வெட்டி வெளி வேடக்காரருக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும்
இருக்கும்.