தற்போதைய வேலைவாய்ப்பற்ற பிரச்சனையைத் தீர்க்க திருத்தந்தை அழைப்பு
மே25,2009. மேலும், தற்போதைய வேலைவாய்ப்பற்ற பிரச்சனையைத் தீர்க்கவும், வேலைவாய்ப்புக்களை
உருவாக்கி கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் குடும்பங்களுக்கு உதவவும் பாதுகாப்பு
அளிக்கவும் வேண்டுமென அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.
மொந்தே கசினோ மிராந்தா வளாகத்தில்
திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, விசுவாசிகள் கிறிஸ்துவின் உண்மையான
பிரசன்னத்தில் தங்களது விசுவாசத்தை உயிரூட்டம் பெறச் செய்யுமாறும் வலியுறுத்தினார்.
கிறிஸ்து
இன்றி நமது வாழ்விலும் அப்போஸ்தலத்துவத்திலும் மதிப்பானது என்று எதையும் செய்ய இயலாது
என்றும் அவர் கூறினார்.
புனித பெனடிக்டின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி இந்த மறைமாவட்ட
சமூகம் கிறிஸ்துவின்மீது தங்கள் வாழ்வைக் கட்டிஎழுப்புவதற்கு ஊக்கப்படுத்துவதே இந்தத்
திருப்பயணத்தின் நோக்கம் என்றும் கூறினார் திருத்தந்தை.
செபம், வேலை, கலாச்சாரம்
என்பது பெனடிக்ட் சபையின் விருதுவாக்கு என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, உலகின்
வேலையை மனிதப்படுத்துவது அந்தத் துறவுமடத்தின் இதயமாக இருக்கின்றது என்றார்.
மாண்புடன்கூடிய
வேலையைக் கண்டுபிடிப்பதற்குக் கஷ்டப்படும் இளையோரைத் தான் நினைப்பதாகக் கூறிய திருத்தந்தை,
அன்பு நண்பர்களே, மனம் தளரவேண்டாம், உங்களைத் திருச்சபை கைவிடாது என்றார்.