28 நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகைவிட்டுத் தந்தையிடம்
செல்கிறேன். ' 29 இதைக் கேட்ட அவருடைய சீடர்கள், ' இப்போதுதான் உருவகம் எதுவுமின்றி
வெளிப்படையாகப் பேசுகிறீர்.30 உமக்கு அனைத்தும் தெரியும். யாரும் உம்மிடம்
கேள்வி கேட்கத் தேவையில்லை என்பது எங்களுக்கு இப்போது புரிகிறது. இதிலிருந்து நீர் கடவுளிடமிருந்து
வந்தவர் என்பதை நம்புகிறோம் ' என்றார்கள்.31 இயேசு அவர்களைப் பார்த்து, '
இப்போது நம்புகிறீர்களா!32 இதோ! காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது. அப்போது
நீங்கள் சிதறடிக்கப்பட்டு ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு ஓடிப்போவீர்கள்; என்னைத் தனியே
விட்டு விடுவீர்கள். ஆயினும் நான் தனியாய் இருப்பதில்லை. தந்தை என்னோடு இருக்கிறார்.33
என் வழியாய் நீங்கள் அமைதி காணும் பொருட்டே நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உலகில் உங்களுக்குத்
துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின் மீது வெற்றி கொண்டுவிட்டேன்
' என்றார்.