இங்கிலாந்தின் வேர்மவுத் என்னும்
இடத்தில் பிறந்தவர் . இளமையிலேயே துறவு நிலையைத் தேர்ந்த இவர் வாழ்நாட்களிலேயே புனிதராகப்
போற்றப்பட்டவர் . கற்பதிலும் , தியானத்திலும் வாழ்நாட்களைச் செலவழித்தார் . இவர் எழுதிய
45 நூற்களும் புகழ் மிக்கவை .
புனித ஏழாம் கிரகோரியார் கி.பி. 1028-1085
.
டஸ்கனி நாட்டில் பிறந்தவர் . இவரது இயற்பெயர் ஹில்டர்பிராண்ட் . உரோமையில்
படிப்பை முடித்தபிறகு துறவியானார் . 5 பாப்பிறைகளுக்கு ஆலோசகராக இருந்தார் . 1073 ல்
பாப்பிறையாகத் தேர்வு செய்யப்பட்டார் . திருச்சபையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார்
.
அதே நாளில் புனித பாஸி மரிய மதலேனம்மாள் கன்னிகை கி.பி. 1566-1607
.
இத்தாலியின் பிளாரன்ஸ் நகரில் பிறந்த இவர் 16 வயதில் கார்மேல் துறவு மடத்தில்
சேர்ந்தார் . பேயினால் 50 ஆண்டுகள் துன்புற்றிருக்கிறார் . ஆண்டவர் இயேசுவின் தரிசனங்களைப்
பெற்ற இவர் இயேசுவின் 5 காயங்களையும் தம்முடலில் கொண்டிருந்திருக்கிறார் . இவ்வாரு வேதனையின்
நடுவே அவரது 41 வயதில் இறைவனடி சேர்ந்தார் .
நாம் துன்பங்களைச் சுமக்கவேண்டும்
என்பது இறைவனின் திருவுளம் . இதை மனத்துணிவுடன் சுமப்போம் . சுமைகள் குறையும் .