மே23,2009. இத்தாலியில் புனித பெனடிக்ட் நிறுவிய துறவுமடம் இருக்கும் மொந்தே கசினோவுக்கு
இஞ்ஞாயிறன்று ஒருநாள் திருப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
பெனடிக்ட்
துறவு சபையின் தொட்டில் என அழைக்கப்படும் மொந்தே கசினோ செல்லும் திருத்தந்தை, காலை 10.15
மணிக்கு கஸ்சினோவின் மிராந்தா வளாகத்தில் திருப்பலி நிகழ்த்துவார்.
பின்னர் வீடற்ற
குடியேற்றதாரருக்கான பிறரன்பு இல்லத்தைத் தொடங்கி வைப்பார்.
மொந்தே கசினோ துறவுமடத்தில்
மதிய உணவை முடித்து மாலை 5 மணியளவில் உலகெங்கிலுமுள்ள பெனடிக்ட் துறவு சபைகளின் தலைவர்கள்
மற்றும் தலைவிகளுடன் மாலைத் திருப்புகழ்மாலை செபித்து உரையும் ஆற்றுவார்.
பின்னர்
இரண்டாம் உலகப் போரில் இறந்த போலந்து படைவீரர்களின் கல்லறைப் பகுதிக்கும் சென்று அஞ்சலி
செலுத்தி மாலை 6.30 மணிக்கு உரோமைக்கு ஹெலிகாப்டரில் புறப்படுவார் திருத்தந்தை.
உரோம்
யுத்தம் அல்லது மொந்தே கஸ்சினோ யுத்தம் என அழைக்கப்படும் போரில் மொந்தே கசினோ துறவுமடம்
குண்டு போட்டு தாக்கப்பட்டதன் 65ம் ஆண்டு தற்போது நினைவுகூரப்படுகின்றது.