புனித ரீத்தா விழா. இவளது கணவனும் இரண்டு மகன்களும் மூர்க்கர்கள். இவளது கடும் செபத்தால்
கணவன் மனம் மாறினார். ஆனால் பகைவர்களால் கொல்லப்பட்டார். ஆனால் மகன்கள் மாறாமல் இருந்ததால்,
ஆண்டவரே இவர்கள் திருந்தச் செய்யும் அல்லது உம்மிடம் எடுத்துக் கொள்ளும் எனச் செபித்தாள்.
அவ்வாறு இரண்டு மகன்களும் இறந்தனர். பின்னர் புனித அகுஸ்தீன் சபையில் சேர்ந்தாள். சிலுவையில்
அறையுண்ட இயேசு மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தாள். இவளது தலையில் ஒருமுள் தைத்துக் கொண்டே
இருந்ததையும் அந்த இரணத்தில் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்ததையும் அதிலிருந்து துர்நாற்றம்
வெளிவருவதையும் உணர்ந்தாள். ஆனால் பார்வையாளர்கள் அவள் அறையிலிருந்து மிகுந்த இறையருளைப்
பெற்றனர்.