வேலையில்லாதவர்களுக்காகப் பரிந்து பேசுகிறார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட். 200509 .
தென் அமெரிக்காவின் பெரு நாட்டு ஆயர்கள் வழக்கமான 5 ஆண்டுக்கு ஒரு முறையிலான சந்திப்புக்காக
உரோமைக்கு வந்துள்ளனர் . அவர்களை வரவேற்றுப்பேசிய திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் தேவையில்
உள்ளோருக்கு உதவுமாறு பரிந்துரைத்தார் . வேலையில்லாது தவிப்போர் , போதைப் பொருட்களுக்கு
அடிமையானோர் , மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டோர் பற்றி திருத்தந்தை கவலை வெளியிட்டார்
. போதிய கல்வியில்லாதவர்கள் , பெரிய நகரங்களுக்கு வெளியே வாழ்வோர் , ஒதுக்கப்பட்டோர்
, இவர்களும் நம் சகோதரர்களே . வலுவற்ற இவர்களை , கடவுள் அன்பு செய்யும் இவர்களை , நாம்
புறக்கணிக்கக் கூடாது . கிறிஸ்துவின் அன்பை நினைவில் கொண்டு நாம் உந்தப்படவேண்டும் என்றார்
திருத்தந்தை .
கிறிஸ்தவக் குடும்பங்களை சந்திக்குமாறு தெரிவித்தார் .
ஆழ்ந்த செபத்தில் ஈடுபட வேண்டும் . மறையுரை ஆற்றுவதற்கு நல்லமுறையில் தயாரிக்க வேண்டும்
. குருக்களுக்கும் , இல்லறவாசிகளுக்கும் , இளைஞர்களுக்கும் மறைப்பணி ஆற்றுவோர்க்கும்
தகுந்த கவனத்தைக் கொடுப்பது புதிய மறைபரப்புப் பணியின் இலக்காக இருக்கவேண்டும் என பெரு
நாட்டு ஆயர்களுக்கு திருத்தந்தை அறிவுரை வழங்கினார் .
ஆண்டவரோடு ஒவ்வொரு
கிறிஸ்தவரும் நெருக்கமான உறவு கொண்டு விவிலியம் காட்டும் வழிமுறையில் வாழ வழி செய்ய வேண்டும்
எனத் திருத்தந்தை ஆயர்களைக் கேட்டுக்கொண்டார் .