2009-05-20 18:39:27

மனித வியாபாரம் மனித இனத்துக்கு மிகப்பெரிய அவமானம் என்கிறார் பேராயர் அகஸ்தீனோ மார்க்கெட்டோ . 200509 .


வத்திக்கான் திருப்பீடத்தின் புலம் பெயர்வோர் மற்றும் பயணியர் மன்றத்தின் செயலராக இருப்பவர் பேராயர் அகஸ்தீனோ மார்க்கெட்டோ . முந்நாள் திருத்தந்தை 23 ஆம் யோவான் பெயரில் மனித வியாபாரத்தை தடுக்கும் மனித மாண்பு என்ற தலைப்பில் உரோமையில் கருத்தரங்கு நடத்துகிறது . அங்கு பேசிய பேராயர் மார்க்கெட்டோ . வறுமையும் , வாழ்க்கை வசதியின்மையும் , சமூகப் பிரச்சனைகளும் மக்களை வேறு நல்ல இடம் தேடிச் செல்லத் தூண்டுகிறது . இது மனித மாண்புக்கு எதிராக மனித வியாபாரமாகும் அபாயம் உள்ளதாகப் பேராயர் தெரிவித்தார் . பல நாடுகளில் இதைத் தடுக்கும் சட்டங்கள் இல்லாதிருப்பதாகவும் , சட்டம் இருந்தும் அது பயன்தராதிருப்பதாகவும் பேராயர் தெரிவித்தார் . இந்த மனித வியாபாரம் எனும் தீய பழக்கத்தை , குற்றத்தை வத்திக்கான் நீக்குவதற்கு நல்ல முயற்சிகளை ஊக்குவி்ப்பதாகப் பேராயர் தெரிவித்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.