இன வேறுபாடுகளை நீக்கும்வரை இலங்கையில் போர் முடிந்ததாகக் கூறமுடியாது என்கிறார் இலங்கையின்
காண்டி ஆயர் . 200509 .
சட்டப்படி போர் முடிந்துள்ளது . தமிழருக்கு எதிரான எதிர்ச்சார்புப் போக்கை கைவிட்டு இலங்கை
வாழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழும்போதுதான் நாம் போர் முடிந்ததாக மகிழ்ச்சி்ப்படலாம்
என இலங்கை ஆயர்கள் குழுவின் தலைவரும் காண்டியின் ஆயருமான ஜோசப் வியான்னி பெர்னாண்டோ
இம்மாதம் 19 ஆம் தேதி தெரிவித்துள்ளார் . இலங்கையின் தலைவர் ராஜபக்சே சிறுபான்மையினர்
என்ற வார்த்தை அகற்றப்படும் எனத் தெரிவித்துள்ளதை ஆயர் வரவேற்றுள்ளார் . இலங்கையின் 1
கோடியே 90 லட்சம் மக்கள் தொகையில் 18 விழுக்காடு மக்கள் தமிழர்கள் .