இணைய தளத்தைப் பாராட்டுகிறார் தந்தை பெடரிக்கோ லொம்பார்டி .2005.
மே மாதம் 24 ல் , வருகின்ற ஞாயிறன்று உலகத் தொடர்பு நாள் கொண்டாடப்படுகிறது . அதையொட்டி
நடந்த கருத்தரங்கில் தந்தை லொம்பார்டி கருத்து வழங்கினார் .
இவ்வாரம் திங்களன்று
செய்தித் தொடர்பாளர்களுக்கு லண்டனிலுள்ள ஆலன் ஹாலில் அவர் உரை வழங்கினார் . அவரது உரையின்போது
நற்செய்தியின் கருத்துக்களைப் பரப்ப இணையதளத்தைப் பயன்படுத்துமாறு தெரிவித்தார் . அண்மைக்
காலத்தில் வத்திக்கான் வானொலியில் இணையதளம் வழியாக இணையதளத்தைப் பயன்படுத்துவோருக்கு
கருத்துப் பரிமாற முடிகிறது எனத் தெரிவித்தார் . கருத்துக்களைப் பரிமாறுவது மட்டுமல்ல
, ஒருவர் ஒருவரோடு கருத்துப் பரிமாறிக்கொள்ளவது மிகப்பெரிய சவாலாக இருப்பதாகவும் தந்தை
பெடரிக்கோ லொம்பார்டி தெரிவித்துள்ளார் .