புனித இசிதோர் விழா. ஸ்பெயின் தலைநகர் மத்ரித்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர் ஏழைகள்
மற்றும் விலங்குகளிடம் மிகுந்த அன்பு காட்டியவர். இசிதோர், விவசாயிகள் மற்றும் மத்ரித்தின்
பாதுகாவலர். இவரது மனைவி மரிய தொரிபியாவும் ஒரு புனிதை. இந்நாளில் பல நகரங்களில் இப்புனிதர்களின்
புனிதப் பொருட்கள் பவனியாக எடுத்துச் செல்லப்பட்டு விளைநிலங்கள் ஆசீர்வதிக்கப்படுகின்றன.
லொயோலா இஞ்ஞாசி, பிரான்சிஸ் சவேரியார், அவிலா தெரேசா, பிலிப்புநேரி ஆகியோர் புனிதர்களாக
உயர்த்தப்பட்ட நாளில் இசிதோரும் புனிதர் என அறிவிக்கப்பட்டார்.