2009-05-14 12:39:07

திருச்சபையைத் தாக்குவதை நிறுத்துமாறு பொலிவிய அரசை எச்சரிக்கிறார் கர்தினால் ஜூலியோ டெரசாஸ் . 140509.


பொலிவியாவின் எல் ஆல்டோ மறைமாவட்டத்தில் ஒரு கத்தோலி்க்க ஆலயத்தை பொலிவிய அரசு அண்மையில் இடித்துத் தள்ளியுள்ளது . எங்களைத் தற்காத்துக் கொள்ள நாங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தத் தேவையில்லை என்கிறார் சாந்தா குரூசின் கர்தினால் ஜூலியோ டெர்ராசாஸ் . கத்தோலிக்கர்களின் கோரிக்கைகள் மதிக்கப்படவேண்டும் எனக் கூறியுள்ளார் . நாங்கள் கடவுளை வணங்கும் முறை மதிக்கப்படவேண்டும் ,தேவையில் உள்ளோருக்கு தொண்டு புரிவது மதிக்கப்படவேண்டும் எனக் கூறியுள்ளார் . கிறிஸ்தவத் தலைவர்களை தாக்கிப்பேசி வருகிறார் அந்நாட்டின் அதிபர் ஈவோ மோராலஸ் . அணமையில் கர்தினாலின் இல்லமும் விஷமிகளால் குண்டு வீசித் தாக்கப்பட்டது .








All the contents on this site are copyrighted ©.