பொலிவியாவின் எல் ஆல்டோ மறைமாவட்டத்தில் ஒரு கத்தோலி்க்க ஆலயத்தை பொலிவிய அரசு அண்மையில்
இடித்துத் தள்ளியுள்ளது . எங்களைத் தற்காத்துக் கொள்ள நாங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தத்
தேவையில்லை என்கிறார் சாந்தா குரூசின் கர்தினால் ஜூலியோ டெர்ராசாஸ் . கத்தோலிக்கர்களின்
கோரிக்கைகள் மதிக்கப்படவேண்டும் எனக் கூறியுள்ளார் . நாங்கள் கடவுளை வணங்கும் முறை மதிக்கப்படவேண்டும்
,தேவையில் உள்ளோருக்கு தொண்டு புரிவது மதிக்கப்படவேண்டும் எனக் கூறியுள்ளார் . கிறிஸ்தவத்
தலைவர்களை தாக்கிப்பேசி வருகிறார் அந்நாட்டின் அதிபர் ஈவோ மோராலஸ் . அணமையில் கர்தினாலின்
இல்லமும் விஷமிகளால் குண்டு வீசித் தாக்கப்பட்டது .