2009-05-13 14:03:40

பிலிப்பைன்சில் இலட்சக்கணக்கான சிறார், விபச்சாரக் கும்பலிடம் சிக்கி பாலியல் தொழிலுக்காக வாடகைக்கு எடுக்கப்படுகின்றனர்


மே13,2009. பிலிப்பைன்சில் இலட்சக்கணக்கான சிறார், விபச்சாரக் கும்பலிடம் சிக்கி பாலியல் தொழிலுக்காக வாடகைக்கு எடுக்கப்படுகின்றனர் மற்றும் ஒருநாளைக்கு 15 மணி நேரம் வரை வயல்களிலும் ஆழமான கடல் பகுதியிலும் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் தெரிவித்தது.

சுரங்களில் வேலை, நிலத்தை உழுதல், தரையைச் சுரண்டுதல் என வாரத்தில் ஏழு நாட்களும் ஒரு நாளைக்கு 15 மணி நேரம் வரை வேலை செய்கின்றனர் என்றும் அச் செய்தி நிறுவனம் கூறியது.

மீன்பிடி காலத்தில் 2 இலட்சத்துக்கு மேற்பட்ட 5 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறார் சில குறிப்பிட்ட நாட்களில் 15 மணி நேரம் வரை வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர், இது அவர்களின் உடல் மற்றும் மனநலத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது என்றும் ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.

உலக தொழில் நிறுவனத்தின் கணிப்புப்படி ஏறத்தாழ ஒரு இலட்சம் சிறார், விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 2 இலட்சம் சிறார் வேதிய மற்றும் உயிரிய உரிமையாளர்களிடம் வேலை செய்கின்றனர். இவர்களில் ஏறத்தாழ 75 விழுக்காட்டினர் 15 வயதுக்குட்பட்டவர்கள்.








All the contents on this site are copyrighted ©.