ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் கவனமாக ஓட்டளிப்பது இன்றியமையாதது, இயேசு சபை வலியுறுத்தல்
மே13,2009. ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் வருகிற ஜூனில் நடைபெறவுள்ளவேளை,
இ.யு. என்ற ஐரோப்பிய சமுதாய அவையின் ஜனநாயக கூற்றைப் பேணிப் பாதுகாப்பதற்கு இத்தேர்தலில்
கவனமாக ஓட்டளிப்பது இன்றியமையாதது என்று இயேசு சபையினர் கூறுகின்றனர்.
பிரசல்ஸ்ஸிலுள்ள
ஐரோப்பிய இயேசு சபை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐரோப்பிய ஒருமைப்பாடு, ஐரோப்பாவில்
குடியேற்றதாரர், ஐரோப்பாவில் மின்சக்தி, ஐரோப்பாவில் அரசியல், வளர்ச்சி போன்ற விவகாரங்களை
மனத்தில் இறுத்தி வாக்குச்சாவடிக்குச் செல்லுமாறு கேட்கப்பட்டுள்ளது