குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து திருத்தந்தை யாத் வாஷெம் என்ற அமரர் நினைவகத்துக்குச்
சென்றார் . அப்போது உள்ளூர் நேரம் மாலை 5.45 இந்திய நேரம் மாலை 7.45 . 600 இலட்சம் யூதர்கள்
படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் நினைவாக இஸ்ராயேல் நாட்டின் அரசு அமைத்த நினைவுச் சின்னம்
. 1953 ல் நிர்மாணிக்கப்பட்டது . விவிலியத்திலிருந்து யாத் வாஷெம் என்ற வாக்கு எடுக்கப்பட்டுள்ளது
.
அங்கு திருத்தந்தை குடியரசுத்தலைவருக்கும் , நினைவகப் பொறுப்பாளருக்கும்
வணக்கம் கூறினார் . பாடல் குழு இசைத்தது . பிறகு அஞ்சலி செலுத்தும் வண்ணம் தீபம் ஏற்றினார்
. மலர் வளையம் ஒன்றை வைத்தார்