2009-05-12 15:08:29

குருக்கள் ஆண்டில் பரிபூரணபலன்


மே12,2009. இவ்வாண்டு ஜூன் 19 முதல் வரும் ஆண்டு ஜூன் 19 வரையுள்ள காலத்தை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அறிவித்துள்ள அனைத்துலக குருக்கள் ஆண்டில் குருக்களுக்காகச் செபிப்பவர்களுக்குப் பரிபூரணபலன் கிடைக்கும் எனத் திருப்பீடம் அறிவித்துள்ளது.

குருக்களின் மிகப்பெரும் எடுத்துக்காட்டாய் விளங்கிய புனித ஜான் மரிய வியான்னி இறந்ததன் 150ம் ஆண்டு நிறைவுறும் வரும் ஜூன் 19ம் தேதியிலிருந்து 2010 ஜூன் 19 வரையிலான குருக்கள் ஆண்டின் போது குருக்களின் புனிதத்துவத்திற்காகவும் நோயுற்றவர்களுக்காகவும் துன்புறுவோருக்காகவும் செபித்துப் பரிபூரணபலன்களைப் பெறுமாறு அழைப்புவிடுத்துள்ளது திருப்பீடம்.

உரோம் நகருக்குக் கொண்டுவரப்பட்டுள்ள புனித ஜான் மரிய வியான்னியின் புனிதப் பொருட்களோடு வரும் ஜூன் 19ம் தேதி திருவழிபாடு நிகழ்வுடன் அனைத்துலக குருக்கள் ஆண்டைத் தொடங்கி வைக்கும் திருத்தந்தை, வரும் ஆண்டு ஜூன் 19ம் தேதி குருக்கள் பிரதிநிதிகளுடன் வத்திக்கான் புனித இராயப்பர் பசிலிக்கா பேராலய வளாகத்தில் நடத்தும் திருப்பலியுடன் அதனை நிறைவுக்குக் கொண்டு வருவார்







All the contents on this site are copyrighted ©.