எருசலேம் நோத்ருதாம் மையத்தில் பல்சமய உரையாடல் குழுவுக்குத் திருத்தந்தை ஆற்றிய உரை
மே12,2009. சமய வேறுபாடுகள் பிரிவினைக்குக் காரணமாக அமையாமல், கடவுளின் வழிகளைப் பிறர்
பின்பற்றுவதற்கு ஊக்கமூட்டும் வாய்ப்பாக இருக்க வேண்டும். சமய வேறுபாடுகள் மதிக்கப்பட்டு
நம் அனைவரையும் ஒன்றிணைப்பதை ஊக்குவிப்பதாய் இருப்பது அவசியம். இந்த வேறுபாடுகள் பதட்டத்திற்குத்
தவிர்க்க முடியாத காரணியாக இருக்கின்றது என்று தவறாக விளக்கமளிக்கப்படக் கூடாது. மாறாக,
பல்வேறு மதத்தவர் ஒருவரையொருவர் மதித்து ஒன்றிணைந்து வாழ்வதற்கு நேர்த்தியான வாய்ப்பை
நல்குகின்றன என்று பல்சமயத்தவரிடம் கூறினார் திருத்தந்தை.