எருசலேம் இலத்தீன் ரீதிப் பேராலயத்தில் திருத்தந்தையின் உரை
மே12,2009. எருசலேம் இலத்தீன் ரீதி பேராலயத்தில் கூடியிருந்தவர்களிடம், இந்நகரில்தான்
புனித இராயப்பர் பெந்தகோஸ்தே நாளில் இயேசு கிறிஸ்துவின் நற்செய்திப் பணியை முதலில் தொடங்கினார்.
அப்போது ஏறத்தாழ 3000 பேருக்குத் திருமுழுக்கு அளித்தார். இங்கிருந்துதான் நற்செய்தி
உலகின் கடைகோடிவரை சென்றது. திருச்சபையின் நற்செய்திப் பணிக்குத் தங்கள் செபத்தால் உதவும்
அடைபட்ட மடங்களில் வாழும் துறவிகளுக்கு நன்றி தெரிவித்தார். கடவுளின் மக்களுக்கானத் தனது
திருப்பணிக்காகத் தொடர்ந்து செபிக்குமாறும் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.