இச்செவ்வாய் உள்ளூர் நேரம் காலை 8.45 மணிக்கு , இந்திய நேரம் 11.15 மணிக்கு பழைய எருசலேத்தில்
இஸ்லாமியர் எழுப்பியுள்ள அல் அக்சா மசூதிக்குத் திருத்தந்தை சென்றார் . அல் அக்சா என்பதற்குப்
புனித புகழ்மிக்க தூய இடம் என்பது பொருள் . அங்கு ஒரு காலத்தில் யூதர்களின் கோவில் இருந்ததாகக்
கூறப்பட்டு , யூதர்களுக்கும் அது ஒரு புனித இடமாகக் கருதப்படுகிறது .