ஜோர்டான் நாட்டில் தமது திருப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரியாவிடை பெற்றுக்கொண்டார்
திருத்தந்தை . அவருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது . அதன் பின்னர் ஜோர்டான்
மன்னர் இரண்டாவது அப்துல்லா பிரியாவிடை செய்தி வழங்கினார் . அதுபோது திருத்தந்தையின்
வருகை நல்லுறவுகளுக்குப் பாலமாகவும் , மக்களின் குறை நீக்கி நீதியுள்ள சமுதாயத்தை அமைக்க
பெரிதும் துணையாக இருக்கும் எனவும் கூறி தம் நாட்டின் சார்பாகத் திருத்தந்தையின் வருகைக்கு
நன்றி தெரிவித்தார் .
அதுபோது உரை வழங்கிய திருத்தந்தை , விவிலியத்தில்
காணப்படும் நாடுகளில் அடுத்த நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்தார்
. ஜோர்டான் நாட்டில் பெற்ற பாசமிகு வரவேற்புக்கு நன்றி தெரிவித்தார் திருத்தந்தை . மன்னர்
2 ஆவது அப்துல்லா ஹாஷேமைட் நாட்டுக்கு வர அழைப்பு விடுத்ததற்கும் , அவருடைய விருந்து
உபசரிப்புக்கும் , அவருடைய பாசமிகு நல் வார்த்தைகளுக்கும் நன்றி தெரிவித்தார் திருத்தந்தை
. பல்வேறு நல்லுள்ளங்கள் திருத்தந்தையின் வருகைக்காக மிகச் சிறப்பாகத் தயாரித்திருந்ததாகத்
தெரிவித்தார் திருத்தந்தை . நேரில் வர இயலாதவர்கள் வானொலி மற்றும் தொலைக்காட்சி வழி நிகழ்ந்தவைகளை
வீடுகளிலிருந்தே ரசித்திருப்பார்கள் எனக்கூறி அவர்களுக்கும் தம் வாழ்த்தைத் தெரிவித்தார்
திருத்தந்தை .
ஜோர்டான் நாட்டுக்குத் தாம் ஒரு திருப்பயணியாக
வந்ததாகத் தெரிவித்த திருத்தந்தை ஜோர்டானில் பெற்ற அனுபவங்கள் எந்நாளும் மறவாது நெஞ்சில்
நிறைந்திருக்கும் எனத் தெரிவித்தார் .
மீண்டும் நன்றி கூறி , பிரியாத
விடைபெற்ற திருத்தந்தை ஹாஷேமைட் அரசின் அனைத்து மக்களையும் நெஞ்சில் கொண்டுள்ளதாகவும்
, நாட்டு மக்கள் அனைவரும் அமைதியையும் , வளப்பத்தையும் இப்போதும் எப்போதும் பெற்று மகிழுமாறும்
கூறி இறை ஆசியை வழங்கி விடை பெற்றுக் கொண்டார் .