2009-05-11 16:18:19

ஜாபுவா மறைமாவட்டத்தின் புதிய ஆயர் அருட்தந்தை தேவ் பிரசாத் ஜான் கனவா


மே11,2009. வட இந்தியாவின் ஜாபுவா மறைமாவட்டத்தின் புதிய ஆயராக இறைவார்த்தை சபையைச் சேர்ந்த அருட்தந்தை தேவ் பிரசாத் ஜான் கனவா அவர்களை இன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

1951ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜாபுவா மறைமாவட்டத்தின் பாஞ்ச்குய் என்ற ஊரில் பிறந்த புதிய ஆயர் ஜான் கனவா, 1982 ம் ஆண்டு எஸ்விடி எனும் இறைவார்த்தை துறவு சபையில் குருவாகத் திருநிலைபடுத்தப்பட்டார்.

பங்குத்தள குருவாகவும், இறைவார்த்தை சபையின் குருமட அதிபராகவும் பணிபுரிந்துள்ள இவர், தற்போது உதய்பூரின் இச்சபையின் மையத்தின் அதிபராக உள்ளார்.

போபால் உயர் மறைமாவட்டத்தின் கீழ் வரும் ஜாபுவா மறைமாவட்டம் 33 ஆயிரத்து 576 கத்தோலிக்கரைக் கொண்டு 29 பங்குத்தளங்களுடன் இயங்கி வருகிறது.

கடந்த அக்டோபரில் ஜாபுவா மறைமாவட்ட ஆயர் சாக்கோ தொட்டுமரிச்சல் இன்டோர் மறைமாவட்டத்திற்கு மாற்றம் பெற்றதிலிருந்து காலியாக இருந்த ஆயர் பதவிக்கு தற்போது இறைவார்த்தை சபை அருட்தந்தை தேவ் பிரசாத் ஜான் கனவா திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.