வத்திக்கான் கீழைத் திருச்சபைகளுக்கு புதிய செயலர் .080509 .
இயேசு சபையைச் சேர்ந்த அருள் தந்தை சிரில் வாசில் கீழைத் திருச்சபைக்கான வத்திக்கான்
மன்றத்தின் செயலராக திருத்தந்தை 16 ஆம் பெனடிக்டால் மே மாதம் 7 ஆம் தேதி நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் பேராயராக உயர்த்தப்பட்டுள்ளார் . இதுவரை அவர் உரோமையில் உள்ள திருப்பீடத்தின் கீழைத்
திருச்சபைக்கான நிறுவனத்தின் தலைவராக இருந்துவந்தார் . கீழைத்திருச்சபை மன்றத்தின் தலைவர்
கர்தினால் லெயனார்டோ சாண்திரியோடு இணைந்து பணிசெய்வார் . ஸ்லோவாக்கியாவில் 1965 ஆம் ஆண்டு
பிறந்த தந்தை சிரில் வாசில் 1987 ல் குருவானார் . 1990 ல் இயேசு சபையில் சேர்ந்தார் .
கீழைத் திருச்சபைக்கான உரோமையின் கல்லூரியில் திருச்சபைச் சட்டத்தில் முனைவர் பட்டம்
பெற்ற தந்தை வாசில் அதே நிறுவனத்தின் தலைவராக 2007 ல் நியமனம் பெற்றார் . திருப்பீடத்தின்
கீழைத்திருச்சபை , விசுவாசம் , புலம்பெயர்வோர் ஆகிய மன்றங்களில் உறுப்பினராக இருந்து
வந்துள்ளார் . பல நூற்களையும் , கட்டுரைகளையும் எழுதியுள்ளார் . வத்திக்கான் வானொலியோடும்
தொடர்புடையவர் .