இந்தியாவின் புனலூர் மறைமாவட்ட ஆயராக
மேதகு சில்வெஸ்டர் பொன்னுமுத்தன் அவர்களை திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் இம்மேமாதம் 8
ஆம் தேதி நியமித்துள்ளார் . இதற்கு முன்னர் அவர் கார்மேல்கிரியில் உள்ள புனித சூசையப்பர்
திருப்பீட குருகுலத்தின் தலைவராக இருந்துவந்தார் . இவர் கேரளத்தின் நெய்யாத்தின்காரா
மறைமாவட்டத்தில் விராலி உச்சக்காடாவில் ஆகஸ்ட்மாதம் 10 ஆம் தேதி 1956 ல் பிறந்தவர் .
டிசம்பர் 19 , 1981 ல் குருப்பட்டம் பெற்றுள்ளார் . நெய்யாத்தின்காரா மறைமாவட்டக் குரு
.
புனலூரின் முதல் ஆயர் மேதகு காப்பில். 1985
ல் இந்த மறைமாவட்டம் உருவாக்கப்பட்டது . புனலூர் மறைமாவட்டம் ஆலப்புழா , கொல்லம் ,
பதனம் தீத்தா ஆகிய அரசு மாவட்டங்களை உள்ளடக்கியது .