2009-05-08 17:20:00

திருத்தந்தை சுவிஸ் காவலர்களை வரவேற்றார் . 080509 .


வத்திக்கானில் பணிசெய்யும் சுவிட்சர்லாந்து நாட்டின் பாதுகாவலர்களைச் சந்தித்துப் பேசினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . இம்மாதம் 7 ஆம் தேதி புதிதாக நியமனம் பெற்ற 32 சுவிஸ் காவலர்களை தனியாக வரவேற்றுப்பேசிய திருத்தந்தை உரோமையில் இருக்கும்போது அகில உலகத் திருச்சபை பற்றி அறிந்துகொள்ளுமாறு கூறினார் . அகில உலகிலும் பரந்துள்ள கத்தோலிக்கத் திருச்சபை பல் வேறு இனத்தைக் கொண்டதாக இருந்தாலும் ஒரே விசுவாசத்தைக் கொண்டதாகவும் , தூய பேதுருவோடு இணைந்தவர்களாக பேதுருவின் வழித்தோன்றல் உரோமையில் உள்ள திருத்தந்தையோடும் தொடர்பும் உறவும் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . மேமாதம் 6 ல் புதிதாக நியமனம் பெற்ற சுவிஸ் காவலர்களை கிறிஸ்தவர்களை இணைக்கும் பிணைப்பினை உணர்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.