உலகக் காரித்தாஸ் தலைவரின் பொருளாதார ஆய்வு – 080509 .
அகில உலகப் பொருளாதாரத்தைப் பற்றிய ஆய்வைத் தெரிவிக்கிறார் அகில உலகக் காரித்தாஸ் தலைவர்
.
வத்திக்கான் திருப்பீடத்துக்கான ஐரோப்பாவின் தூதுவர்கள் பலருக்கு உரை வழங்கினார்
அகில உலகக் காரத்தாஸ் நிறுவனத் தலைவர் கர்தினால் ஆஸ்கர் ரொட்ரீகுவஸ் மாராடீகா . வளரும்
நாடுகளுக்கு செல்வம் மிக்க நாடுகள் உதவவேண்டும் என் அதுபோது வலியுறுத்தினார் . பொருளாதாரப்
பின்னடைவால் ஏழை நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் . பல ஆண்டுகளாகப்
பொருளாதார ஏற்றத் தாழ்வால் பாதிக்கப்பட்ட ஏழைமக்கள் தற்போது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகத்
தெரிவித்தார் . 2009 ல் பல கோடி மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக வருத்தம்
தெரிவித்தார் . 2009 லிருந்து 2015 க்குள் வறுமை காரணமாக பல இலட்சம் குழந்தைகள் இறக்கநேரிடும்
என மேலும் தெரிவித்துள்ளார் . பேராசையில் இருந்து விடுபட்டு மனித மாண்பைக் காக்கவும்
,நீதியுடன் நடக்கவும் வேண்டும் எனக் கர்தினால் மாராடீகா வலியுறுத்தினார் .