ஹாங்காங்கில் வருகிற ஜூலை முதல் தேதியிலிருந்து 2010ம் ஆண்டு இறுதி வரை குருத்துவ அழைத்தல்
ஆண்டு
மே02,2009. ஹாங்காங்கில் ஏற்பட்டுள்ள குருக்கள் பற்றாக்குறை பிரச்சனையைக் களையும் நோக்கத்தில்
குருத்துவ அழைத்தல் ஆண்டை அறிவித்துள்ளார் ஹாங்காங் ஆயர் ஜான் டாங் ஹோன்.
ஹாங்காங்
மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பதவியேற்ற நிகழ்வில் பேசிய அவர், குருத்துவ அழைத்தல் அதிகரிக்க
அனைவரையும் ஊக்குவிக்கவிருப்பதாகவும் கூறினார்.
வருகிற ஜூலை ஒன்றாந்தேதியிலிருந்து
2010ம் ஆண்டு இறுதி வரை குருத்துவ அழைத்தல் ஆண்டு சிறப்பிக்கப்படும் என்றார் ஆயர் டாங்
ஹோன்.
பாஸ்கா கால 4ம் ஞாயிறு அகிலத் திருச்சபையில் இறையழைத்தல் ஞாயிறாகச் சிறப்பிக்கப்படுகின்றது.
அன்றைய தினம் குருத்துவ மற்றும் துறவு வாழ்வுக்கு அழைத்தல்கள் அதிகரிக்கச் செபிக்குமாறு
அனைத்து விசுவாசிகளும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.