மியான்மாருக்குல் சர்வதேச நிவாரண உதவிகள் மேலும் நர்கீஸ் தேவைப்படுகின்றன, ஐ.நா.
மே02,2009. மியான்மாரில் நர்கீஸ் கடும் புயல் ஏற்பட்டு ஓராண்டு ஆகியுள்ள இவ்வேளையில்
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சர்வதேச நிவாரண உதவிகள் தேவைப்படுவதாக ஐ.நா. கூறியது.
தென்
கிழக்கு ஆசிய நாடான மியான்மாரில் 2008ம் ஆண்டு மே 2,3 தேதிகளில் மணிக்கு 240 கிலோ மீட்டர்
வேகத்தில் அடித்த புயல் மற்றும் 4 மீட்டர் உயரத்திற்கு எழுந்த அலைகளினால் சுமார் 1,40,
000 பேர் இறந்தனர் மற்றும் சுமார் 24 இலட்சம் பேரின் வாழ்வும் கேள்விக்குறியானது.
இந்த
ஓராண்டு காலத்தில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறார் படிப்பதற்கு உதவிகள் செய்யப்பட்டுள்ளன,
4000 மெட்ரிக் டன் நெல் விநியோகிக்கப்பட்டுள்ளது. 4000 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.
எனினும்,
நிவாரணப் பணிகளைத் தொடருவதற்கு சர்வதேச உதவிகள் மேலும் தேவைப்படுவதாக ஐ.நா.கூறியது.