ஐந்தாவது ஆசிய இளையோர் தினத்திற்கானத் தயாரிப்புக்கள் தொடங்கப்பட்டுள்ளன
மே02,2009. பிலிப்பைன்சில் வருகிற நவம்பர் 20 முதல் 27 வரை சிறப்பிக்கப்படவுள்ள ஐந்தாவது
ஆசிய இளையோர் தினத்திற்கானத் தயாரிப்புக்கள் அந்நாட்டின் சிலாங்கில் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த
ஆசிய இளையோர் தினம் சிறப்பிக்கப்படவுள்ள சிலாங் அன்னைமரி பேராலயத்தில் சுமார் ஆயிரம்
இளையோர் கூடி இத்தயாரிப்புக்களின் ஆரம்ப நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
ஆசிய ஆயர்
பேரவைகள் கூட்டமைப்பின் பொது நிலையினர் மற்றும் குடும்ப ஆணையத்தின் இளையோர் அலுவலகமும்,
பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவையின் இளையோர் ஆணையமும் சேர்ந்து இதன நடத்துகின்றன.
ஆசிய
இளையோர் தினம் 1999ல் தாய்லாந்திலும், 2001ல் தாய்வானிலும், 2003ல் இந்தியாவிலும், 2006ல்
ஹாங்காங்கிலும் நடைபெற்றன.
இளம் ஆசியர்கள் ஒன்று சேர்ந்து வந்து இறைவார்த்தையைப்
பகிர்ந்து திருநற்கருணையை வாழ்தல் என்பது ஐந்தாவது ஆசிய இளையோர் தினத்திற்கானத் தலைப்பாகும்.