2009-05-01 18:07:57

திருத்தந்தையின் புனித பூமி திருப்பயணத்தின்போது 100 யூத குருக்கள் அவரை வரவேற்கவுள்ளனர். 010509 .


யூத மதத்தலைவர்களும் , கத்தோலிக்கத் தலைவர்களும் ஒற்றுமைக்கு வழிகாண உரையாடல் நடத்த உள்ளனர் . இம்மாதம் 8 ஆம் தேதியிலிருந்து 15 தேதிவரை திருப்பூமியில் திருத்தந்தை பயணம் மேற்கொள்ளும்போது புனித பூமி , ஜோர்டான் , இஸ்ராயேல் , மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளுக்குச் செல்ல உள்ளார் . திருத்தந்தையின் இந்தத் திருப்பயணத்தை உறவுப் பாலம் என வருணி்க்கிறது இஸ்ராயேல் அரசு . இரு சமயங்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும் மதிக்கவும் இந்தக் கலந்து உரையாடல் உதவும் என யூதகுலக் குரு ராபி ஜாக் பெம்போராட் தெரிவித்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.