2009-05-01 18:17:41

இலங்கைப் போர் தொடர்ந்தால் மக்கள் அழிவார்கள்.கொழும்புப் பேராயர்,010509.


இலங்கையில் போர் தொடர்ந்தால் சிங்களம் பேசுவோரும தமிழரும் அங்கு அழிந்துபோவார்கள் எனக் கூறுகிறார் கொழும்பு நகரப் பேராயர் . 2 ஆவது உலக மகாயுத்தத்தின் முடிவி்ல் நடந்தது போல நாடு நிலைபெறாது என எச்சரிக்கை விடுத்தார் பேராயர் ஆஸவால்டு கோமிஸ் . ஒன்றுபட்டால் வாழவுண்டு இல்லையேல் வீழ்வோம் எனக்கூறிய பேராயர் கோமிஸ் அமைதிக்கு வழிவகுக்கவும் புலம்பெயர்வோருக்கு உதவிடவும் திருச்சபை உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தார் . அரசு கனரக போர்கருவிகளைப் பயன்படுத்துவதில்லை எனத் தெரிவித்திருந்தும் போரால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளும் உயர்ந்துகொண்டு போவதாகத் தெரிவித்தார் . பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் தூதர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசு இணங்கமறுத்துவிட்டது அவர்களின் பயணம் தோல்வியைக் கண்டதாக அவர்கள் தெரிவித்ததை பேராயர் எடுத்துக்கூறினார் . விரைவில் போர் முடிவுக்கு வரவேண்டும் என்றும் போரால் விளையும் அறிவின்மையை மக்கள் உணர்வார்கள் என்றும் தெரிவித்த பேராயர் ஆஸ்வால்டு கோமிஸ் பாதுகாப்பில்லாத அப்பாவி மக்களைக் கொல்வது தவிர்க்கப்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.