இலங்கைப் படுகொலைக்கு கிறிஸ்தவர்கள் டெல்லியில் எதிர்ப்புக்குரல்.300409.
கிறிஸ்தவ ஐக்கியக்குழு டெல்லியில் கூடி இலங்கையில் நடந்துவரும் இனப்படுகொலைக்கு தங்கள்
எதிர்ப்பைத் தெரிவித்தனர் . இந்திய அரசு இலங்கை ராணுவத்துக்கு ஆயுதங்களை வழங்கியும் ,
தேவையான ராணுவத் திறமையாளர்களை வழிகாட்டுவதற்கு அனுப்புவதையும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்
. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல் வேறு கிறிஸ்தவசபையைச் சேர்ந்த தலைவர்கள்
மற்றும் இறைமக்கள் இந்த ஒருநாள் போராட்டத்தை ஏப்ரல் 29 புதனன்று மேற்கொண்டனர் . காலை
9 மணியிலிருந்து 500க்கும் அதிகமானோர் இதில் பங்கேற்றனர் . போரால் துயருறும் தமிழ் மக்களுக்குத்
தம் திரண்ட ஆதரவைக் காட்டுவதாகக்கூறி டெல்லிப்பேராயர் வின்செண்ட் கொன்செஸ்ஸாவோ இந்தப்போராட்டத்தைத்
தொடங்கிவைத்தார் . இந்திய அரசு இரட்டை வேடம் போடுவதைப்போல தமிழக அரசும் தமிழ்மக்கள் துயர்
போக்க பெரிதாக ஏதும் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.