ஆசியச் சமூகச் செய்தித் தொடர்பாளர்களின் கருத்தரங்கு மே மாதம் 4 லிருந்து 9 வரை பாங்காக்
நகரின் அசம்ப்சன் பல்கலைக்கழகத்தில் நடக்கவுள்ளது . ஆசியக் கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்களில்
சமூகச் செய்தித் தொடர்பு கல்வியின் நிலைமை எப்படி உள்ளது என ஆராயப்படவுள்ளது . இந்தக்
கருத்தரங்கு 7 வது பிஸ்காம் – அதாவது சமூகத் தொடர்புக்கான ஆயர்கள் நிறுவனத்தின் 7 வது
அமர்வாக இருக்கும் . ஆசியாவில் உள்ள 30 கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் சமூகச் செய்தித்
தொடர்பு பற்றிய பாடத்திட்டம் , கற்பிக்கும் முறை மற்றும் பயிலும் மாணவர்கள் பெறும் திறமை
பற்றி விவாதிக்க உள்ளன . இந்தக் கூட்டு அமர்வு வத்திகானின் சமூகத் தொடர்பு மன்றத்தாலும்
, ஆசிய ஆயர்கள் குழுவாலும் நடத்தப்படவுள்ளது .