2009-04-30 17:42:59

அர்ஜெண்டீனாவின் ஆயர்களை வரவேற்றார் திருத்தந்தை .300409.


ஏப்ரல் 30 காலையில் திருத்தந்தை அர்ஜெண்டீனா நாட்டின் மூன்றாவது ஆயர்கள் குழுவை அவர்களுடைய அத்லீமினா சந்திப்புக்காக வரவேற்று உரை வழங்கினார் . வரவேற்றுப் பேசிய திருத்தந்தை அர்ஜெண்டீனா ஆயர்களின் இந்தச் சந்திப்பு வத்திக்கானுக்கும் ஆயர்களுக்கும் உள்ள உறவை வலுப்படுத்தும் எனத் தெரிவித்தார் . அந்நாட்டு ஆயர்கள் குழுவின் உதவித்தலைவர் பேராயர் லூயி வில்லாபா வழங்கிய தொடக்க வாழ்த்துரைக்குத் திருத்தந்தை நன்றிகூறினார் .

ஆயர்களிடம் மிகுந்த துணிவும் மேன்மையும் பொருந்திய பணியைக் கடவுள் கொடுத்திருப்பதாகத் தெரிவித்தார் . அமைதியும் ஒப்புரவும் அளிக்கும் , பாசமிகு தந்தையாகிய கடவுளின் அன்பை தூய இறைமக்களுக்கு மீட்புக்காக வழங்குவதற்கு அழைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார் திருத்தந்தை. நம்முடைய தகுதியிக்கும் அப்பால் கடவுள் நம்மைத் தேர்ந்து கொண்டதால் நாம் கடவுள் தரும் நம்பிக்கையை மக்களுக்கு வழங்குகிறோம் என்றார் திருத்தந்தை. நமக்காக தம்மையே காணிக்கையாக்கிய இயேசுவை நாம் எந்நாளும் நம் மாதிரியாகக் கொள்வோம் என்று மேலும் திருத்தந்தை அறிவுறுத்தினார். இறை மக்களை நற்செய்தியின் வழியில் வழிநடத்துமாறு கூறி வந்திருந்த ஆயர்களுக்கும் அர்ஜெண்டீனா நாட்டு மக்களுக்கும் தலைவர்களுக்கும் தமது அப்போஸ்தலிக்க ஆசியை வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.