2009-04-29 14:51:50

பிரேசிலில் 2008ம் ஆண்டில் நிலம் தொடர்பான மோதல்களில் இடம் பெற்றுள்ள கொலைகளில் எழுபது விழுக்காட்டுக்கும் அதிகமானவை அமேசான் பகுதியில் இடம் பெற்றுள்ளன, ஆயர் பேரவை


ஏப்.29,2009. பிரேசில் நாட்டில் 2008ம் ஆண்டில் நிலம் தொடர்பான மோதல்களில் இடம் பெற்றுள்ள கொலைகளில் எழுபது விழுக்காட்டுக்கும் அதிகமானவை அமேசான் பகுதியில் இடம் பெற்றுள்ளதாக அந்நாட்டு ஆயர் பேரவையின் நில மேய்ப்புப்பணி ஆணையம் வெளியிட்ட அறிக்கை கூறியது.

பிரேசில் ஆயர்கள் பேரவையின் கூட்டத்தில் இச்செவ்வாயன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், 2005ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டு அருட்சகோதரி டாரதி ஸ்டாங் சுட்டுக் கொல்லப்பட்ட பாரா மாகாணத்தில் அதிகமான கொலைகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

எனினும், 2007ம் ஆண்டைவிட 2008ம் ஆண்டில் குறைவான நிலத் தகராறுகள் இடம் பெற்றிருந்தாலும், அவற்றில் இடம் பெற்ற கொலைகளின் எண்ணிக்கை ஒரே அளவாக இருந்ததாகவும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

பிரேசிலில் 2008ம் ஆண்டில் நிலம் தொடர்பாக இடம் பெற்ற 1,170 மோதல்களில் ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர் எனவும் ஆயர் பேரவையின் அறிக்கை கூறியது.








All the contents on this site are copyrighted ©.