கென்ய அரசியல் தலைவர்கள் நம்பிக்கைக்குரியவர்களாகச் செயல்பட ஆயர்கள் அழைப்பு
ஏப்.29,2009. கென்ய நாட்டு அரசியல் தலைவர்கள் குடிமக்களின் தேவைகளைப் புறக்கணிக்கின்றனர்
மற்றும் அவர்களின் சொந்த ஆதாயங்களைத் தேடுகின்றனர் என்று அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள்
குறை கூறினர்.
குடிமக்களுக்குச் சொந்தமான உடமைகளும் செல்வங்களும் அரசியல்வாதிகளால்
தான்தோன்றித்தனமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்றுரைக்கும் ஆயர்களின் அறிக்கை, பூர்வீக
இனத்தவர் தவறாகப் பயன்படுத்தப்படுவது அவர்களுக்குள் பிளவுகளை அதிகரிக்கின்றன என்றும்
கூறியது.
பணம் இருந்தால் யாரும் எதையும் சாதிக்கலாம் என்ற உணர்வு இருப்பதாகக்
கூறிய கென்ய ஆயர்கள், அரசியல் தலைவர்கள் குடிமக்களின் நம்பிக்கைக்குரியவர்களாகச் செயல்படவும்
அழைப்புவிடுத்துள்ளனர்.