2009-04-29 14:49:47

இத்தாலியில் நிலஅதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட இடங்களையும் மக்களையும் பார்வையிட்ட திருத்தந்தை 16ம் பெனடிக்டுக்கு லாக்குய்லா பேராயர் நன்றி


ஏப்.29,2009. இத்தாலியில் நிலஅதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட இடங்களையும் மக்களையும் பார்வையிட்ட திருத்தந்தை 16ம் பெனடிக்டுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார் லாக்குய்லா பேராயர் ஜூசப்பே மொலினாரி.

இச்செவ்வாயன்று இப்பகுதிக்குப் பயணம் மேற்கொண்ட திருத்தந்தை உரைத்த நம்பிக்கை நிறைந்த வார்த்தைகள் தங்களின் இதயங்களில் நம்பிக்கையை மீண்டும் ஏற்றியுள்ளன என்றும் பேராயர் கூறினார்.

கொல்லெமாஜ்ஜோ புனித மரியா பசிலிக்காவிலுள்ள புனித திருத்தந்தை ஐந்தாம் செலஸ்தீனோ திருவுடல் மீது தான் பாப்பிறையான போது பயன்படுத்திய பால்யத்தை வைத்து அதனைக் கொடையாகக் கொடுத்தமைக்கும், ரோய்யோ மாதாவுக்குத் தங்க ரோஜாவைக் காணிக்கையாக்கியதற்கும் கொஞ்சம் பணம் கொடுத்தமைக்கும், திருத்தந்தை 16ம் பெனடிக்டுக்கு நன்றி தெரிவித்தார் பேராயர் ஜூசப்பே மொலினாரி.

மேலும், ஏப்ரல் ஆறாம் தேதி நிலஅதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட அப்ருஸ்ஸோ பகுதி மக்களோடு ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதற்கென மே 10ம் தேதி வத்திக்கான் அருங்காட்சியகம் திறக்கப்பட்டிருக்கும் எனவும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது







All the contents on this site are copyrighted ©.