2009-04-27 16:16:32

பன்றிக்காய்ச்சலை தடுக்க நடவடிக்கை


ஏப்.27,2009. மெக்சிக்கோவில் பரவிய இந்தப் பன்றிக் காய்ச்சலால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர் பலியாகியுள்ள வேளை, இந்நோயை உருவாக்கும் புதுவகை நோய்க் கிருமி பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை உலகம் முழுவதும் சுகாதார மற்றும் உடல்நலத்துறை அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

பல விமான நிலையங்களில் வந்திறங்குபவர்களிடம் ஆசியா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகள் இந்நோய்க் கிருமிக்கான சோதனைகளை நடத்த ஆரம்பித்துள்ளன.

ஜப்பானில், மெக்சிகோவிலிருந்து வரும் பயணிகளின் உடல் வெப்பநிலையை அதிகாரிகள் சோதிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்தப் பன்றிக்காய்ச்சல் ஏற்கனவே அமெரிக்காவுக்குப் பரவியுள்ளது. குறைந்தது 11 பேர் அங்கு இந்த நோய்க் கிருமித் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் இந்நோய்க் கிருநிகள் தொடர்பாக சர்வதேச அளவில் எச்சரிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.