நற்செய்தியாளரும், புனித பேதுருவின் நெருங்கிய உதவியாளரும், அலக்ஸாண்டிரிய திருச்சபையை
நிறுவியவரும், அதன் முதல் ஆயரும் ஆன புனித மாற்குவின் விழா இன்று. புனிதர்கள் பவுல் மற்றும்
பர்ணபாசின் நற்செய்தி அறிவிப்புப் பயணத்தின் போது இணைந்து பணியாற்றியவர். புனிதர்கள்
பேதுரு மற்றும் பவுலோடு ரோம் நகருக்கு வந்தவர் புனித மாற்கு. யேசுவோடு உடனிருந்த புனித
பேதுருவின் வார்த்தைகளை நேரடியாகக் கேட்டு நற்செய்தி நூலை எழுதினார் இப்புனிதர். புனித
மாற்குவின் தாய் தன் எருசலேம் வீட்டை ஆதி கால கிறித்தவர்க்களின் பயன்பாட்டிற்கென வழங்கியவர்.