இந்தியக் கிறிஸ்தவ , இஸ்லாமியத் தலைவர்களின் வேண்டுகோள்கள்.2304 .
இந்தியக் கிறிஸ்தவ , இஸ்லாமியத் தலைவர்கள் தேர்தல் சமயத்தில் வாக்குக் கேட்கும் கட்சியினரிடம்
சில வேண்டுகோள்களை வைத்துள்ளார்கள் . மேற்கு வங்காளத்தில் தேர்தல் நடைபெறும் முன்னர்
சமயச் சுதந்திரத்துக்கும் , சமூக அமைதிக்கும் வழி செய்யுமாறு கேட்டுள்ளனர் . மக்களுக்காக
மக்கள் என்ற ஒரு அமைப்பு 44 கோரிக்கைகளை முன் வைத்துள்ளது . மேற்கு வங்காளம் 42 தலைவர்களை
பாராளுமன்றத்துக்குத் தேர்வு செய்ய வேண்டியுள்ளது . தேர்தல் ஏப்ரல் 30 , மே மாதம் 7 மற்றும்
13 ஆம் தேதிகளில் 3 கட்டமாக நடக்க உள்ளது . சமுதாயப் பிளவு சக்திகளை முறியடித்த சமூகப்
பிரிவினை வாதத்தைத் தடுக்குமாறும் கோரியுள்ளனர் . மத மற்றும் இனத் தீவிர வாதப்போக்குடையோரைக்
தடுக்குமாறும் அமைதியை நிலை நாட்ட வழிசெய்யுமாறும் தேர்தல் வேட்பாளர்களைக் கேட்டுள்ளனர்
.