2009-04-22 15:18:08

நம்பிக்கையிழந்த நிலையில் வாழும் இன்றைய மனிதனின் கேள்விகளுக்கான ஒரே பதில் கிறிஸ்துவின் உயிர்ப்பே, பிதாப்பிதா முதலாம் பர்த்தலோமேயோ


ஏப்.22,2009. நம்பிக்கையிழந்த நிலையில் வாழும் இன்றைய மனிதனின் கேள்விகளுக்கான ஒரே பதில் கிறிஸ்துவின் உயிர்ப்பே என்று பிதாப்பிதா முதலாம் பர்த்தலோமேயோ கூறினார்.

கிறிஸ்துவின் உயிர்ப்பினால் மரணத்தின் மீது வாழ்வு வெற்றி அடைந்துள்ளது மற்றும் இவ்வுயிர்ப்பு மக்களில் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது என்று பிதாப்பிதாவின் கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாச் செய்தி கூறுகிறது.

கிறிஸ்துவின் உயிர்ப்புச் செய்திகள் கடவுள் நம்பிக்கையற்ற மனிதனின் மனச்சான்றுகளைக் குழப்பும் என்றுரைக்கும் அச்செய்தி, கடவுளின் மரணம் பற்றிய இறையியல் விவாதத்தில் ஈடுபட்டுருப்பவர்க்கும் இவை குழப்பத்தை உண்டுபண்ணும் என்றும் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.