2009-04-20 14:42:56

ஈரான் அரசுத்தலைவர் திருத்தந்தைக்கு நல்வாழ்த்து


ஏப்.20,2009. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பாப்பிறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் நான்காம் ஆண்டை முன்னிட்டு அவருக்கு நல்வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார் ஈரான் அரசுத்தலைவர் முகமது அஹ்மதினெஜாட்.

திருப்பீடத்துக்கும் ஈரானுக்குமிடையேயான உறவு மிகவும் நன்றாக இருப்பதாக குறிப்பிடும் அச்செய்தியில், இந்த இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கப்பட வேண்டுமென்ற ஈரான் அரசுத்தலைவரின் ஆவலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது







All the contents on this site are copyrighted ©.