2009-04-17 18:29:20

இம்மாதம் 15 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் பேராயராக பேராயர் திமோத்தி டோலன் திருநிலைப் படுத்தப்பட்டிருக்கிறார் .170409


பேராயர் திமோத்தி அவருடைய மறையுரையின்போது தமது பெற்றோர்கள் புலம் பெயர்ந்து அமெரிக்காவுக்கு வந்தவர்களென்றும் , இங்கு வருகின்றவர்கள் பொன்னும் பொருளும் அல்ல , கிறிஸ்துவ விசுவாசத்தைப் பற்றிக்கொண்டு இங்கு வந்தார்கள் எனத் தெரிவித்தார் . விடுதலைத் தாயாக திருச்சபை வந்தவர்களை வாஞ்சையோடு வரவேற்றதாக பேராயர் மேலும் தெரிவித்தார் . நியூயார்க் மறைமாவட்ட குருக்களுக்கும் துறவியருக்கும் பாராட்டுத் தெரிவித்த பேராயர் திமோத்தி அவர்கள் அவருடைய கண்ணின் மணியாக இருப்பதாகத் தெரிவித்தார் . தங்கள் குருதியைச் சிந்தி மறைசாட்சியர் புனித ஐசக் ஜோக்ஸ் போன்றவர்கள் விசுவாசத்தை விதைத்துள்ளதாகத் தெரிவித்தார் . அங்குள்ள குருகுலத்தோர் , துறவியரில் உயிர்த்த இயேசு வாழ்ந்து கொண்டிருப்பதாக மேலும் பேராயர் திமோத்தி டோலன் மறையுரையின்போது தெரிவித்தார் .







All the contents on this site are copyrighted ©.