பிரான்சிஸ்கன் துறவு சபை தொடங்கப்பட்டதன் 800ம் ஆண்டுக் கொண்டாட்டங்கள்
ஏப்ரல்15,2009. பிரான்சிஸ்கன் துறவு சபை தொடங்கப்பட்டதன் 800ம் ஆண்டுக் கொண்டாட்டங்கள்
இன்று இத்தாலியின் அசிசி நகரில் ஆரம்பித்துள்ளன.
அசிசி நகர் புனித பிரான்சிஸ்,
தமது சபையின் ஒழுங்குகள் அங்கீகரிக்கப்படுவதற்காக 1209ம் ஆண்டு திருத்தந்தை மூன்றாம்
இன்னோசென்ட்டிடம் சமர்ப்பித்த 800ம் ஆண்டையொட்டி, அப்புனிதர் பெயரைத் தாங்கிய துறவு சபைகளின்
ஏறத்தாழ இரண்டாயிரம் பிரதிநிதிகள் அசிசி நகரில் பேரவையைத் தொடங்கியுள்ளனர்.
சபையின்
ஆரம்ப கால நிகழ்வுகளைக் கொண்டாடி திருச்சபை மற்றும் அகில உலகுகோடு இச்சபைகள் கொண்டுள்ள
தோழமையை காட்டுவதற்கு இவ்விழா நல்ல வாய்ப்பாக இருக்கின்றது என்று அச்சபையின் அருள்தந்தை
ஹோசே ரொர்ட்ரிக்கஸ் கூறினார்.