நேபாளத்தில் ஏறத்தாழ இருபது இலட்சம் பேர் கடும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை எதிர்நோக்கக்கூடும்,ஐ.நா.வல்லுனர்கள்
ஏப்ரல்15,2009. நேபாளத்தில் கடும் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ள வேளை, ஏறத்தாழ இருபது இலட்சம்
பேர் கடும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை எதிர்நோக்கக்கூடும் என்று ஐ.நா.வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
தெராய்
மாகாணத்தின் 75 மாவட்டங்களில் 41ல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதால் உணவு நெருக்கடியால்
மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றரைக்கும் ஐ.நா.வல்லுனர்கள், அரசு இப்பிரச்சனையை
தீர்ப்பதற்கு ஆர்வமாய் இல்லை என்று மக்கள் குறை கூறுவதாகவும் தெரிவித்தனர்.
குளிர்
காலத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால் 30 முதல் 70 விழுக்காடு வரை அறுவடை பாதிக்கப்படும்
என்றும் அந்நாட்டின் 2 கோடியே 30 இலட்சம் பேரில் இருபது இலட்சம் பேர் உணவின்றி விடப்படும்
ஆபத்தை எதிர்நோக்குகின்றனர் என்றும் ஐ.நா. உணவு திட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.