சீனாவில் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் சித்ரவதைகள் தடை செய்யப்படுவதற்குத் திட்டம்
ஏப்ரல்15,2009. சீனாவில் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் சித்ரவதைகளும் சிறைக் கைதிகள்
தவறாக நடத்தப்படுவதும் தடை செய்யப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆசிய செய்தி நிறுவனம்
கூறியது.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான இலக்குகளை சீனாவின் தேசிய அவை வெளியிட்டுள்ள
திட்டத்தின்படி, அனைத்துக் கைதிகளுக்கும் உடல் மற்றும் உளவியல் ரீதியான பாதுகாப்பு அளிக்கப்படும்
என்பதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக அச்செய்தி நிறுவனம் கூறியது.
அவ்வவையின்
தேசிய மனித உரிமைகள் செயல் திட்டத்தின்படி, விசாரணைக்கு முன்னும் பின்னும் உடல் பரிசோதனை
செய்வதாகச் சித்ரவதைகள் மூலம் இரகசியங்கள் கரப்பது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வருவாயை
பெருக்குதல், 18 கோடி புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குதல் , நியாயமான விலைக்கு விற்பதற்காக
வீடுகள் கட்டுதல், குடிமக்களின் பொருளாதார உரிமைகளைப் பாதுகாத்தல் போன்றவையும் அத்திட்டத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.