இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் நில அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட லாக்குய்லா பகுதியை பார்வையிட்டார்
ஏப்ரல்14,2009. நில அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட இத்தாலியின் லாக்குய்லா பகுதியை இன்று
பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார் இத்தாலியின் ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால்
ஆஞ்சலோ பாக்னாக்ஸ்கோ.
இத்தாலியத் தலத்திருச்சபையின் சார்பாக இப்பகுதிக்குச் சென்ற
கர்தினால், நில அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டோர் தங்கியிருக்கும் மருத்துவமனைகளுக்கும்
முகாம்களுக்கும் சென்றதுடன், மருத்துவமனையிலேயே அவர்களுடன் உணவருந்தி மாலையில் திறந்தவெளி
அரங்கில் அம்மக்களுக்கு்த் திருப்பலியும் நிகழ்த்தினார்.
மதிய உணவுக்குப் பின்னர்
லாக்குய்லாவின் புனித பிரான்சிஸ் அசிசி பங்குத்தளத்திலிருந்து செயல்படும் அப்பகுதிக்கான
காரித்தாஸ் மையத்தையும் சந்தித்தார் இத்தாலியின் ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் பாக்னாக்ஸ்கோ.