இலங்கைக்காகச் செபிக்க உலக கிறிஸ்தவ சபைகளின் அவை வேண்டுகோள்
ஏப்ரல் 13, 2009. இலங்கையில் இடம் பெறும் போர் முடிவுக்கு வரவும், அந்நாட்டில் நிலையான
அமைதி நிலவவும் உலகக் கிறிஸ்தவர்கள் அனைவரும் செபிக்குமாறு உலக கிறிஸ்தவ சபைகளின் அவை
வேண்டுகோள் விடுத்துள்ளது.
டொரொன்ட்டோ அறிக்கை என்ற தலைப்பில், சமய சுதந்திரத்திற்கான
17 கிறிஸ்தவ சபைகளின் அமைப்புகள் வெளியிட்டுள்ள விண்ணப்பத்தில், மனிதாபிமானப் பேரிடர்களையும்
சமய சுதந்திரத்திற்கான அச்சுறுத்தலையும் எதிர் நோக்கும் இலங்கைத் திருச்சபைக்காகச் செபிக்குமாறு
கேட்கப்பட்டுள்ளது.
128 நாடுகளில் அங்கத்தினர்களைக் கொண்டுள்ள உலக இவாஞ்சலிக்கல்
கூட்டமைப்பின் சமய சுதந்திரத்திற்கான அமைப்பு, பிரிட்டனின் சர்வதேச கிறிஸ்தவ தோழமை, கானடாவின்
மறைசாட்சிகளின் குரல் என 17 அரசுசாரா அமைப்புகள் இணைந்து இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளன.