2009-04-07 15:11:58

பக்சர் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் குரு செபஸ்தியான் கல்லுப்புரா


ஏப்ரல்07,2009. இந்தியாவின் பக்சர் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பாட்னா உயர்மறைமாவட்ட குரு செபஸ்தியான் கல்லுப்புராவை இன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

1953ம் ஆண்டு கேரளாவின் சீரோ மலபார் ரீதி குடும்பத்தில் பிறந்த குரு செபஸ்தியான் கல்லுப்புரா 1984ம் ஆண்டு பாட்னா உயர்மறைமாவட்டத்தின் குருவாகத் திருநிலைபடுத்தப்பட்டார்.

இவ்வுயர்மறைமாவட்டத்தின் பொருளாளர், சமூக பொருளாதார வளர்ச்சி மையமான சேவா கேந்திராவின் இயக்குனர் மற்றும் பீகார் சமூக அவையின் இயக்குனர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார் குரு கல்லுப்புரா.

பக்சர் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிய ஆயர் வில்லியம் டி சுசா, 2007ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி பாட்னா பேராயராக மாற்றப்பட்டதிலிருந்து ஆயரின்றி காலியாக இருந்த பக்சர் மறைமாவட்டத்திற்கு இச்செவ்வாயன்று புதிய ஆயராக அருட்திரு செபஸ்தியான் கல்லுப்புரா நியமிக்கப்பட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.