திருத்தந்தைக்கு எதிரான பெல்ஜிய அரசின் முயற்சி குறித்து ஆயர்கள் கவலை
ஏப்ரல்04,2009. எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்கு கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவது தீர்வாக
இருக்காது என்ற திருத்தந்தை 16ம் பெனடிக்டின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு பெல்ஜிய
அரசு பரிந்துரை செய்துள்ளது குறித்து அந்நாட்டு ஆயர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பெல்ஜிய
அரசு, திருத்தந்தையின் ஏற்க முடியாத இக்கருத்துக்கு கண்டனம் தெரிவித்து திருப்பீடத்தின்
முன்னர் அதிகாரப்பூர்வமாகப் போராட்டம் நடத்த வேண்டுமென்று அந்நாட்டு நாடாளுமன்றம் பரிந்துரைத்துள்ளது
திருத்தந்தையின் ஒட்டுமொத்த செய்தியையும் கவனத்தில் கொள்ளாமல் செயல்பட்டதாகத் தெரிவதாக
ஆயர்கள் கூறியுள்ளனர்.
பொறுப்பான கல்வியறிவின் மூலம் செய்யப்படாத எந்தத் தடை நடவடிக்கையும்
வெற்றி பெறாது என்ற திருத்தந்தையின் செய்தியை பெல்ஜிய நாடாளுமன்றம் கருத்தாய் ஆராயவில்லை
என்று ஆயர்கள் குறை கூறினர்.