ஐ.நா.நிறுவனம் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது,
மூன்
ஏப்ரல்04,2009. நிலக்கண்ணி வெடிகளின் பாதிப்புக்கள் நாட்டுக்கு நாடு வேறுபட்டு இருந்தாலும்
அவை மனித வாழ்வுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கின்றன என்று ஐ.நா.பொதுச் செயலர்
பான் கி மூன் கூறினார்.
நிலக்கண்ணி வெடிகள் பற்றிய சர்வதேச விழிப்புணர்வு தினம்
இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு பேசிய மூன், ஐ.நா.நிறுவனம் 50க்கும் மேற்பட்ட நாடுகளில்
நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறினார்.
1999ம் ஆண்டிலிருந்து
40 இலட்சத்துக்கும் மேற்பட்ட வெடிகளும் 2006ம் ஆண்டில் மட்டும் 450 க்கும் அதிகமான சதுர
கிலோ மீட்டர் பரப்பளவில் 2,17,000 த்துக்கு மேற்பட்ட வெடிகளும் அகற்றப்பட்டுள்ளன.
இன்று
சுமார் 78 நாடுகள் இவ்வெடிகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்டு வாழ்ந்து
கொண்டிருக்கும் 5 இலட்சம் பேரில் நான்கில் மூன்று பகுதியினர் அப்பாவி பொது மக்கள்.